
நாடு முழுவதும் ஸ்வச் பாரத் அபியான் – ஸ்வச்டா ஹாய் சேவா என்ற சிறப்பு தூய்மை பணிகள் மேற்கொள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி சிறப்பு தூய்மை பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் தீவிர தூய்மைப் பணிகள் நடைபெற்றது. தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்தில் நடைபெற்ற தூய்மை பணிகளை தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி தொடங்கி வைத்து உறுதிமொழி ஏற்றார்.
பின்னர் பஸ் நிலையத்தில் நடைபெற்ற தூய்மைப் பணிகளில் கலந்து கொண்டு துடைப்பத்தால் பஸ் நிலையப் பகுதியில் குப்பைகளை பெருக்கி சுத்தம் செய்தார்.
நிகழ்ச்சியில், பொதுமக்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.