
பிறகு பெருமாள் படத்திற்கு முன் 3 இலைகள் போட்டு 5 வகை சாதகத்தை நைவேத்தியமாக படைக்க வேண்டும். சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் அல்லது நெல்லிக்காய் சாதம், தேய்காய் சாதம், தயிர் சாதம், வெங்காயம் சேர்க்காமல் மிளரு மட்டும் போட்டு செய்யும் உளுந்து வடை, சுண்டல், பானகம் ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும். மாவிளக்கு படைத்து வழிபடும் பழக்கம் இருந்தால் அதையும் சேர்த்து வழிபடலாம். இந்த சாதங்களை வரிசையாக வைத்தும் வழிபடலாம் அல்லது இந்த சாதங்களைக் கொண்டு பெருமாளின் திருமுகத்தை வரைந்தும் படைத்து வழிபடலாம். தீப, தூப ஆராதனை காட்டி வழிபட்ட பிறகு, தளிகையில் வைக்கப்பட்ட சாதத்தை நாம் சாப்பிட வேண்டும்.