
சென்னை மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வண்டலூரில் உள்ள கல்லூரிக்கு செல்வதற்காக கனிஷ்கா(16), என்ற மாணவி காத்திருந்த போது ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த வசந்த என்பவர் கத்தியால் மாணவியை சரமாறியாக குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதில் டிப்ளமோ படிக்கும் கல்லூரி மாணவிக்கு தலை, தொடை, கைவிரல், முகத்தின் தாடை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் ஒரு தலை காதலால் கத்தியால் குத்தியதாக தகவல். பள்ளிகரணை காவல் துறையினர் விசாரணை.