திருவனந்தபுரம்: கார்கள் உள்பட இலகு ரக வாகனங்களில் டிரைவர்கள் மற்றும் முன் இருக்கையில் இருப்பவர்களுக்கு ஏற்கனவே சீட் பெல்ட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஸ்கள், லாரிகள் உள்பட கனரக வாகனங்களுக்கும் சீட் பெல்ட்டை கட்டாயமாக்க சமீபத்தில் தீர்மானிக்கப்பட்டது. அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. இதையடுத்து கேரளாவில் அரசு பஸ்களில் டிரைவர்கள் மற்றும் கேபின்களில் இருப்பவர்களுக்கு சீட் பெல்ட் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு சில தினங்களில் இதற்கான பணிகள் தொடங்கும் என கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.