ஆசிரியர் தினத்தையொட்டி மக்கள் விழிப்புணர்வு சங்கம் குரோம்பேட்டை நேரு நகரில் உள்ள ஐயா சாமி ஐயர் பள்ளியில் 35 ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கினர். இந்த விழாவிற்கு சமூகசேவகர் வி.சந்தானம் தலைமை தாங்கினார். சி.ஆர்.நரசிம்மன், மூத்த குடிமக்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.மீனாட்சி சுந்தரம், போலீஸ் கிருஷ்ணமூர்த்தி வாழ்த்தி பேசினர். சமூக ஆர்வலர் ரங்காச்சாரி பள்ளிக்குத் தேவையான எல்.இ.டி.பல்புகள் பள்ளியின் தாளாளர் மனோகரிடம் வழங்கினார். மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.