1. மச்ச_அவதாரம்
    தாயின் வயிற்றிலிருநது ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன்.
  2. கூர்ம_அவதாரம்
    மூன்றாம் மாதம் கவிழந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை.
  3. வராக_அவதாரம்
    ஆறாம் மாதம் முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது பன்றி.
  4. நரசிம்ம_அவதாரம்
    எட்டாம் மாதம் உட்கார்ந்து கையில் கிடைத்ததை கிழிப்பது நரசிம்மம் .
  5. வாமன_அவதாரம்
    ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்,
  6. பரசுராம_அவதாரம்
    வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.
  7. ராம_அவதாரம்
    திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது.
  8. பலராம_அவதாரம்
    இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர், உலகோர்க்கு கடமையாற்றுவது.
  9. கிருஷ்ண_அவதாரம்
    முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது.
  10. கல்கிஅவதாரம்
    இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும், தன்னுள் எல்லாவற்றையும் காணும்
    அறிவின் முழுமையாம் முக்தி பெறுவது.