செம்பருத்திப் பூவை வெயிலில் நன்கு காயவைத்து பொடியாக்க வேண்டும். இந்த பொடியுடன் தேன் மற்றும் கற்றாழை சேர்த்து நன்கு கலக்கவும்.
செம்பருத்திப் பொடி செய்ய முடியாதவர்கள், பூவை இரவு முழுவதும் தண்ணீரில் நன்றாக ஊறவைத்து, காலையில் பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளலாம். இந்த கலவையை முகத்தில் தடவுவதற்கு முன், முகத்தை 5 முதல் 7 நிமிடங்கள் நீராவியில் காட்ட வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.
அதன் பிறகு, முகத்தை நன்கு துடைத்து, கலந்த பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள். சுமார் 20 நிமிடங்கள் வைத்திருங்கள். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை நன்கு கழுவவும். அதன் பிறகு ஒரு நாள் கூட முகத்தில் எந்த சோப்பும் பயன்படுத்தக்கூடாது. அப்போதுதான் கூடுதல் பலன் கிடைக்கும். வாரம் ஒருமுறை இப்படி செய்து வந்தால் நம் முகம் தங்கம் போல் ஜொலிக்கும். மேலும் முகத்தில் உள்ள தேமல் படை போன்ற பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.