
பாஜக அரசின் ஊழல் பட்டியலை அம்பலப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், திருவாரூர் மாவட்டம் பவித்திரமாணிக்கத்தில் நடைபெற்ற நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர்
திரு.எம்.செல்வராஜ் அவர்களது இல்லத் திருமண விழாவுக்குத் தலைமையேற்று ஆற்றிய உரையின் விவரம் வருமாறு
🎙️பி.ஜே.பி. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏனென்றால் தமிழ்நாட்டைக் காப்பாற்றிவிட்டோம். இந்தியாவைக் காப்பாற்றும் நிலைக்கு நாம் இப்போது வந்திருக்கிறோம். இந்தியாவைக் காப்பாற்றுவதற்காகத்தான் ‘இந்தியா’ கூட்டணி அமைந்திருக்கிறது.
பீகார் மாநிலத்தில், நிதிஷ் குமார் அவர்கள் தலைமையில் கூடி எதிர்க்கட்சியில் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணி உருவாக முதல் கூட்டத்தை பீகார் மாநிலத்தில் நடத்தினோம். அதற்கு அடுத்து கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரில் இரண்டாவது கூட்டத்தை நடத்தினோம். அதில்தான் இந்தியா என்ற பெயரைத் தேர்வு செய்து நம் கூட்டணிக்கு பெயர் அறிவித்தோம். அடுத்த வருகின்ற ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய இரண்டு நாட்கள் மும்பையில் மூன்றாவது கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் முக்கிய முடிவுகளை எல்லாம் நாம் அறிவிக்க இருக்கிறோம். நானும் அந்தக் கூட்டத்திற்குச் செல்ல இருக்கிறேன்.
எனவே தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சியை உருவாக்கித் தருவதற்கு நீங்கள் எல்லாம் எவ்வாறு காரணமாக இருந்தீர்களோ அதே போல் ஒன்றியத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மூலமாக ஒன்றிய அரசு அமைவதற்கு அது நல்லரசாக அமைவதற்கு நீங்கள் எல்லாம் காரணமாக இருக்க வேண்டும்.
தேர்தல் பிரச்சாரத்தை இங்கே தொடங்கி வைக்க வேண்டும் என்று நம்முடைய முத்தரசன் அவர்கள் குறிப்பிட்டார்கள். தொடங்கத்தான் வந்திருக்கிறேன், நான் எப்போதுமே தேர்தல் பிரச்சாரத்தை திருவாரூரில்தான் தொடங்குவேன். இப்போதும் அதே உணர்வோடுதான் இந்த மேடையில் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.
ஒன்பது வருடமாக பி.ஜே.பி.யின் ஆட்சி மோடி அவர்கள் தலைமையில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஒன்பது வருடமாக நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதை செய்திருக்கிறோம், இந்தத் திட்டங்களை அறிவித்திருக்கிறோம். நிறைவேற்றி இருக்கிறோம், சாதனைகளைப் படைத்திருக்கிறோம், மக்களுக்கு எல்லாம் இப்படி நன்மைகளை செய்திருக்கிறோம் என்று ஏதாவது சொல்ல முடிகிறதா? எதுவும் சொல்ல முடியவில்லை. அவர்களால்
தேர்தலுக்கு முன்னால் என்ன சொன்னார்கள், வெளிநாடுகளில் இருக்கும் கருப்பு பணத்தை எல்லாம் கைப்பற்றி அதை இந்தியாவிற்குக் கொண்டு வந்து நாட்டு மக்கள் அத்தனை பேருக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுக்கப்போகிறேன் என்று அறிவித்தார். நான் பல கூட்டங்களில் கேட்டேன். நான் மட்டுமல்ல, எல்லோரும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். 15 லட்சம் வேண்டாம், 15 ஆயிரமாவது தந்தார்களா? 15 ஆயிரம் வேண்டாம், 15 இதுவரையில் இல்லை. ரூபாயாவது தந்தார்களா?
நாட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு எல்லாம் ஒரு ஆண்டிற்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவோம் என்று உறுதிமொழி தந்தார்கள். எங்காவது ஒன்றிய அரசின் மூலமாக வேலை வழங்கப்பட்டு இருக்கிறதா? இல்லை. வேலைகள் பறிக்கப்பட்டு இருக்கிறது. இதுதான் இந்த ஆட்சியின் நிலை. இதைப்பற்றி நாம் ஒரு பக்கத்தில் பேசுகிறோம்.
இதைவிட கொடுமை. மதத்தை வைத்து ஆங்காங்கே மதக் கலவரங்களை ஏற்படுத்தி, நாட்டை இரண்டாக்கும் சூழ்நிலையில் ஒரு கொடிய ஆட்சி இன்றைக்கு இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. இதைப்பற்றி எல்லாம் கலந்து பேசி இதற்கான முடிவெடுக்க வேண்டும், இந்த ஆட்சியை ஒழித்தாக வேண்டும், தேர்தலில் நல்ல
பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இந்தியா என்ற தலைமையில் ஒரு கூட்டணியை நாம் அமைத்திருக்கிறோம்.
இதைப் பிரதமர் மோடியால் தாங்க முடியவில்லை. அதிலும் தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் எப்படி நாடாளுமன்றத் தேர்தலில், சட்டமன்றத் தேர்தலில், உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் – ஒரு கூட்டணி அமைத்து ஸ்ட்ராங்காக அந்தக் கூட்டணியை வழிநடத்திக் கொண்டிருக்கிறோமோ, அந்தக் கூட்டணி தொடர்ந்து தமிழ்நாட்டில் வெற்றி பெற்று கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும். எனவே அப்படிப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் இந்தக் கூட்டணியும் அந்த இந்தியா கூட்டணியில் சேர்ந்திருக்கிறது. இந்தியா என்ற கூட்டணி உருவாகுவதற்கு தமிழ்நாட்டில் இருக்கும் இந்தக் கூட்டணி காரணமாக இருக்கிறது என்ற ஒரு ஆத்திரம் இன்றைக்கு பிரதமராக இருக்கும் மோடிக்கு வந்துவிட்டது. அதனால்தான் எங்கு சென்றாலும், அது சுதந்திர தின நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, கொடியேற்று விழா நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அல்லது பல மாநிலங்களுக்குச் சென்று அங்கு நடத்தும் அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அல்லது வெளிநாடுகளுக்கு செல்லும் நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி – எங்கு சென்றாலும் இன்றைக்கு நாம் அமைத்திருக்கும் கூட்டணியைப் பற்றி விமர்சனம் செய்து பேசிக் கொண்டிருக்கிறார், கொச்சைப்படுத்தி பேசுகிறார்.
அதிலும் தமிழ்நாட்டில் இருக்கும் நம்முடைய அணியைப் பற்றி, குறிப்பாக தி.மு.க.வை பற்றி இன்றைக்கு அவரால் பேசாமல் இருக்க முடியவில்லை. அந்த அளவிற்குக் கொச்சைப்படுத்திப் பேசுகிறார்.
என்ன பேசுகிறார்? தமிழ்நாட்டில் ஊழல் வந்துவிட்டதாம். ஒன்பது வருடமாக சொல்லிக் கொண்டிருக்கிறார். “எனவே அந்த
ஊழலை ஒழித்தே தீருவேன். இந்தியாவில் இருக்கும் ஊழலைத் ஒழித்தே தீருவேன்” என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்.
நான் பிரதமர் மோடி அவர்களை பார்த்து அடக்கத்தோடு கேட்க விரும்புவது, ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை பிரதமராக இருக்கும் மோடிக்கு உண்டா? உங்களுடைய வண்டவாளம் எல்லாம் இப்போது சி.ஏ.ஜி. ஆதாரங்களோடு எடுத்து வெளியிடுகிறார்களே. எல்லாவற்றையும் குறித்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். ஏனென்றால் புள்ளி விவரம் இது. தவறாகப் பேசி விடக்கூடாது. எதையும் ஆதாரத்தோடுதான் பேச வேண்டும். அதற்காக நான் புள்ளி விவரத்தை எல்லாம் வந்திருக்கிறேன். குறித்து கையில் எடுத்துவிட்டுத்தான்
ஊழலைப் பற்றி பேசுவதற்கு பி.ஜே.பி.க்கு என்ன தகுதி இருக்கிறது? நான் கேட்கிறேன். சி.ஏ.ஜி. அறிக்கை இன்றைக்கு என்ன சொல்கிறது. சி.ஏ.ஜி. அறிக்கை என்பது ஒரு ஆய்வு அறிக்கை. மத்திய அரசிற்குக் கட்டுப்பட்டு இருக்கும் அந்த அமைப்பு. அது ஒவ்வொரு வருடமும் அன்றைக்கு அரசின் நிலையைப் பற்றி, அந்த அரசு செய்திருக்கும் செலவுகளை பற்றி ஆய்வு செய்து அதற்கு ஒப்பீடு கொடுப்பார்கள். அதுதான் சி.ஏ.ஜி.யின் வேலை.
அந்த சி.ஏ.ஜி. என்ன சொல்கிறது என்றால், ஒன்றியத்தில் நடைபெறும் பா.ஜ.க. ஆட்சி – ஊழல் ஆட்சி. முறைகேடுகள் அதிகம் கொண்ட ஆட்சி. லஞ்ச லாவண்யம் பெருத்துப் போன ஆட்சி என்று சொல்கிறது. நாங்கள் சொல்லவில்லை. எதிர்க்கட்சி சொல்லவில்லை. நாங்கள் சொல்வதாக நீங்கள் நினைக்க வேண்டாம். நாங்கள் ஏற்கனவே சொல்லிக் கொண்டிருக்கிறோம் அது வேறு. இப்போது யார் சொல்கிறார்? சி.ஏ.ஜி. சொல்கிறது. மத்திய கணக்குத் துறையின் அறிக்கை சொல்கிறது.
ஏழு விதமான ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஒன்று, இரண்டு அல்ல – ஏழு விதமான ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
பாரத்மாலா திட்டம்
துவாரகா விரைவுப் பாதைக் கட்டுமானத் திட்டம்
சுங்கச் சாவடி கட்டணங்கள்
ஆயுஷ்மான் பாரத் திட்டம்
அயோத்தியா மேம்பாட்டுத் திட்டம்
கிராமப்புர அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டம்
எச்.ஏ.எல். விமான வடிவமைப்புத் திட்டம்
இந்த ஏழு நடந்திருக்கிறது திட்டங்களிலும் பல கோடி ரூபாய் ஊழல் என்று மிகத் தெளிவாக எடுத்துச் இருக்கிறது. நிதியைக் கையாளுவதில் மோசடிகள் சொல்லி அரங்கேறி இருக்கிறது என்று இந்த அறிக்கை பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்தி இருக்கிறது.
- அதாவது, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் என்ற ஒரே போலி செல்போன்(9999999999) நம்பரில் 7.5 லட்சம் பயனாளிகள் இணைக்கப்பட்டு ஊழல் நடந்திருக்கிறது. எவ்வாறு பச்சையாக ஒரு மோசடியை செய்திருக்கிறார்கள் பாருங்கள்!
. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற நோயாளிகளில், 88 ஆயிரத்து 760 பேர் இறந்துவிட்டார்கள். ஆனால், அவர்கள் இறந்த பிறகும், சிகிச்சை அளிக்கப்படுவதாக சொல்லி, 2 லட்சத்து 14 ஆயிரத்து 923 காப்பீட்டுக் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு,காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
தகுதியில்லாத குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் பயனாளிகளாக பதிவு செய்யப்பட்டு, சுமார் 22 கோடியே 44 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்திருக்கிறது. இதை நாங்கள் சொல்லவில்லை. எங்கள் இந்தியா கூட்டணி சொல்லவில்லை. இதைக் கண்டுபிடித்து, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆய்வறிக்கை வெளியிடும் சி.ஏ.ஜி. அறிக்கை சொல்கிறது.
துவாரகா விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்தில், ஒரு கிலோ மீட்டருக்கு 18 கோடி ரூபாயாக இருந்த செலவு 250 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. நன்றாக கவனியுங்கள்! திட்ட மதிப்பை விட, 278 மடங்கு கூடுதல் செலவு செய்யப்பட்டிருக்கிறது.
அயோத்தியில் நவீனப்படுத்துகிறோம் போட்டிருக்கிறார்கள். ராமாயணம் என்று இதில் தொடர்புடைய இடங்களை சொல்லி ஒரு விதிமுறைகளை திட்டம் மீறி ஒப்பந்ததாரர்களுக்கு தேவையற்ற சலுகைகள் தரப்பட்டிருக்கிறது. இதனால் அரசுக்கு 8 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
பாரத்மாலா திட்ட டெண்டர் முறைகேடுகளை அம்பலப்படுத்தி இருக்கிறது. ஒரு கிலோ மீட்டர் சி.ஏ.ஜி. தொலைவு நெடுஞ்சாலை அமைக்க நிர்ணயித்ததைவிட, இரண்டு மடங்கு அதிகமாக நிதி வழங்கப்பட்டிருக்கிறது.
நாடு முழுவதும் சுமார் 600 சுங்கச்சாவடிகள் இருக்கிறது. இதில் 5 சுங்கச்சாவடிகளை மட்டும் சி.ஏ.ஜி. ஆய்வு செய்திருக்கிறது. அதில் விதிகளுக்குப் புறம்பாக, 132 கோடியே 5 லட்சம் ரூபாயை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலித்திருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் பரனூர் சுங்கச்சாவடியும் இதில் ஒன்று. இந்த ஒரே ஒரு
சுங்கச்சாவடியில் மட்டும் ஆறரை கோடி ரூபாய் முறைகேடாக வசூலித்திருக்கிறார்கள். எனவே நாடுமுழுவதும் ஆய்வு நடத்தினால், பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு வெளிச்சத்திற்கு வரும் என்று அந்த ஆய்வறிக்கை சொல்கிறது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் விமான எந்திரம் வடிவமைப்பில் இருக்கிறார்கள். 159 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி
ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டப் பணத்தை ஒன்றிய அரசு விளம்பரத்துக்காகப் பயன்படுத்தி எடுத்து இருக்கிறார்கள்.
இவ்வாறு என்னென்ன முறைகேடுகள்? எவ்வளவு கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறது என்று மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த ஆய்வறிக்கை – அந்த நிறுவனம் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறது.
அதே சி.ஏ.ஜி. அறிக்கையின்படி ஒன்றிய அரசுத் துறைகளில் ஏழரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது.
ஊழலைப் பற்றி ஒன்றிய அமைச்சர் மாண்புமிகு அமித் ஷா அவர்கள் அதிகம் கவலைப்படுகிறார்.
இன்னொரு அமைப்பு சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன், அதாவது சி.வி.சி. என்ன சொல்கிறது என்றால், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் சில நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
ஒன்றிய அதிகாரிகள் – அமைச்சகங்களிலேயே உள்துறை அமைச்சக அலுவலர்கள் மேல்தான் கடந்த வருடம் அதிகமான ஊழல் புகார்கள் பதிவாகி இருக்கிறது. இதையும்
சொல்லவில்லை. சி.வி.சி. அறிக்கைதான் சொல்கிறது. நான்
அதில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால், ஒன்றிய அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு எதிராக, கடந்த ஆண்டு மட்டுமே, 1 லட்சத்து 15 ஆயிரத்து 203 புகார்கள் பதிவாகி இருக்கிறது. இதில் உள்துறை அதிகாரிகள் மீது மட்டும் 46 ஆயிரத்து 643 புகார்கள் பதிவாகி இருக்கிறது.
ஒழிக்கப் இன்றைக்குப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள்தான் ஊழலை போகிறோம் என்று நடித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இவர்கள் செய்த தவறை எல்லாம் மூடி மறைத்து, நம்மீது வீண்பழியை சுமத்தி, இவற்றைப் பற்றி எல்லாம் தி.மு.க. பேசுகிறதே. தி.மு.க. கூட்டணி கட்சிகள் பேசுகிறதே என்று ஆத்திரம் ஏற்பட்டு, கோபம் ஏற்பட்டு, எரிச்சலில் நம்மை பழி வாங்குவதற்காக இன்றைக்கு சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை என்று நம்மை எல்லாம் மிரட்டி பார்க்கிறார்கள்.
இதையெல்லாம் கண்டு அஞ்சி நடுங்கிவிடுகிற கட்சி தி.மு.க. அல்ல. தி.மு.க என்பது பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கு எல்லாம் நாம் அஞ்சி விடமாட்டோம். எமர்ஜென்சியையே பார்த்தோம். எமர்ஜென்சியையே எதிர்த்தோம். எனவே எதைப் பற்றியும் தி.மு.க. கவலைப்படத் தயாராக இல்லை. அதேபோல் இந்தியா என்று அமைப்பில் இருக்கும் கூட்டணியும் இதைப் பற்றி கவலைப்படவும், சிந்திக்கவும் தயாராக இல்லை. எனவே தங்களுடைய லஞ்ச லாவண்யங்களை கொண்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். இனி மூடி மறைப்பதற்காக, இன்றைக்கு மதவாதத்தைக் கையில் எடுத்துக் வரும் காலகட்டங்களில் தமிழ்நாட்டு மக்களை மட்டுமல்ல, இந்தியாவையும் நீங்கள் ஏமாற்ற முடியாது. அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான் இந்தியா கூட்டணி அமைந்திருக்கிறது. அந்த இந்தியா கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இடம்பெற்றிருக்கிறது என்று உங்களுக்கு நன்றாக தெரியும். அந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போர் வீரர்களில் ஒருவராக விளங்கிக் கொண்டிருப்பவர்தான் செல்வராஜ் அவர்கள். நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்
அந்த செல்வராஜ் அவர்கள் இல்லத்தில் நடைபெறும் இந்த மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்பதில் நான் பெருமைப்படுகிறேன். மகிழ்ச்சி அடைகிறேன். எனவே மணவிழா காணும் மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெற்று சிறப்போடு வாழ்ந்திட வேண்டும்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும், வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்குத் தொண்டர்களாய் இருந்து, உங்கள் வாழ்க்கையை நீங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும்.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து திராவிட மாடல் ஆட்சி என்ற பெயரில் நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் திட்டங்கள், சாதனைகள் அத்தனையும் உங்களுக்கு நன்றாக தெரியும். தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களை எல்லாம் எந்த அளவிற்குப் படிப்படியாக என்பது உங்களுக்கு புரியும். நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
நேற்று முன்தினம், 25-ஆம் தேதி, திருக்குவளையில் கலைஞர் படித்த பள்ளியில் தொடங்கிய திட்டம்தான் காலை உணவுத் திட்டம். இது அல்ல. எனவே
தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டம்
சொன்னதை மட்டும் அல்ல, சொல்லாததையும் செய்யும் ஆட்சிதான் இன்றைக்கு இருக்கும் திராவிட மாடல் ஆட்சி. அதேபோல் வருகிற செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று கலைஞர் பெயரால் அமைந்திருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்படவிருக்கிறது. ஒரு கோடிக்கும் குறையாமல், அதைவிட அதிகமாகத்தான் வரும் என்று இன்றைக்கு கணக்கு விவரங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு வந்தாலும் கவலை இல்லை. யார் யாருக்குச் சேர வேண்டுமோ அவர்களுக்கு நிச்சயமாக அந்த தொகை சென்று சேரப்போகிறது.
இப்படிப்பட்ட இந்த ஆட்சிக்குத்தான் இன்றைக்கு நீங்கள் துணை நின்று கொண்டிருக்கிறீர்கள். எப்படி தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சி உருவாகுவதற்கு, உருவாக்குவதற்கு காரணமாக திராவிட மாடல் இருந்தீர்களோ, ஆட்சி அதேபோல் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றியத்தில் ஒரு சிறப்பான ஆட்சி உருவாக நீங்கள் எல்லாம் காரணமாக இருக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டு. வாழ்க மணமக்கள் வாழ்க மணமக்கள் என்று தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.