காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க கர்நாடகாவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. காவிரியில் கர்நாடகா நீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கர்நாடகாவில் மழை போதிய அளவு பெய்யவில்லை என்று கூறி கர்நாடக அரசு நீர்திறப்பதை குறைத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து நீர் திறப்பது குறித்து இன்றைய அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பிறகு கர்நாடக அரசு முடிவு செய்ய உள்ளது.