
மாணவ மாணவிகளின் தொடர் தற்கொலைகளுக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து மதிமுக சார்பில் குரோம்பேட்டை தாபல் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.
சென்னை குரோம்பேட்டை தபால் முன்பாக அருகில் மதிமுக சார்பில் மாணவ, மாணவிகளின் தொடர் தற்கொலைகளுக்கு காரணமான மருத்துவ நுழைவு நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் மாவை மகேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதிமுக குரோம்பேட்டை நாசர் முன்னிலை வகிக்க மதிமுக துணைப் பொதுச் செயலாலர் மல்லை சத்யா, பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் செந்தில்குமார், மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப்பொது செயலாளர் யாகூப், விசிக முன்னாள் மாவட்ட செயலாளர் தேவ.அருள்பிரகாசம், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட தலைவர் முருகன் பல்வேறு உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஆளுநரே வெளியேறு, எச்சரிக்கை, எச்சரிக்கை ஆளுநருக்கு எச்சரிக்கை என கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சமீபத்தில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட ஜெகதீஸ்வரனின் நண்பர் பயாசுதீன் கலந்து கொண்டுள்ளார்.
மதிமுக கவுன்சிலர் புஹிராபானு நாசர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.