
நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது என்பதை உணர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லாவரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நடைற்றது. இந்நிகழ்வில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.
அப்போது அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்:
நீட் மசோதாவிற்கு எதிரான தீர்மானத்தில் கையெழுதிட
மாட்டேன் என ஆளுநர் சொல்வது. அவர் சொந்த கருத்தை திணிக்க கூடாது. நடுநிலையோடு செயல்பட வேண்டும்.
இது மக்களுடைய விருப்பம். எனக்கு பிடிக்கும் உங்களுக்கு பிடிக்காது என ஆளுநர் பிரதிபலிக்க கூடாது.
தமிழ்நாட்டில் பாஜக தவிர அனைத்து கட்சிகளும் நீட் தேவையில்லை என தெரிவிக்கிறார்கள்.
ஆளுநர் சொல்லியது ஏற்றுக்கொள்ள முடியாது.
காசு இருந்தா மட்டும் தான் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்.7.5% இட ஒதுக்கீடு இல்லை என்றால் அரசு பள்ளி மாணவர்கள் விரல் விட்டு எண்ணும் வகையில் தான் இருந்திருப்பார்கள்.
எதற்கு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு நடத்துகிறீர்கள் நீட் மட்டும் நடத்துங்க, அறிவு சார்ந்த கல்வி இல்லை, பயிற்சி சார்ந்த கல்வி இல்லை என்றார்.
நீட் பயிற்சி மையங்கள் தமிழ்நாட்டில் மூட வேண்டும் என ஆளுநர் ஒப்புக் கொள்வாரா? என அன்புமணி கேள்வி எழுப்பினார்.
நீட் ஏழை பிள்ளைகளுக்கு எதிரானது ஆளுநர் இது போன்ற பேச்சை நிறுத்தி வைக்க வேண்டும்.
காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசு அடாவடிதனம் செய்கிறது இது கண்டிக்கத்தக்கது.
காவிரி படுகையில் அணைகளில் நிரம்பி இருக்கிறது, 84% நீர் இருக்கிறது. இங்கு நமக்கு வறட்சி இருக்கிறது இவ்வளவு தண்ணீர் வைத்துக் கொண்டு கொடுக்காத கர்நாடகா அரசு மீது தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும்.
நீரை வைத்துக் கொண்டு கொடுக்க மறுக்கிறார்கள்.
இப்போதைய சூழலை நம்மால் சமாளிக்க முடியவில்லை, மேகதாது அணையை கட்டினால் தண்ணீர் கிடைக்காது. இதை நம்பி இங்கு 5 கோடி மக்கள் இருக்கிறார்கள்.
தமிழக முதல்வர் அனைத்து கட்சியினரை அழைத்துக் கொண்டு டெல்லி செல்ல வேண்டும் என்றார்.
மேகதாது அணை திட்டமிட்டமிருப்பது 71 டி.எம்.சி கொள்ளவு கொண்டது. 175 டி.எம்.சி.கொள்ளளவு கொண்ட மாநிலமாக கார்நாடகா மாறும். இதற்கு முதலமைச்சர் உடனடி தீர்வு காண வேண்டும்.
விவசாயிகளுக்கு தண்ணீர் வேண்டும் இதில் அனைத்து கட்சியும் உறுதுணையாக இருக்க வேண்டும் இதில் அரசியல் செய்ய வேண்டாம்.
சமீபத்தில் நடந்த நாங்குநேரி சம்பவம் கண்டிக்கத்தக்கது. பள்ளியில் தாக்குதல் நடந்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. போதைப் பொருள் அதிகளவில் பள்ளி அருகே விற்கபடுகிறது.
2 ஆண்டுகளாக போதைப் பொருட்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி வருகிறேன் ஆனால் ஏதோ நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்.
என்எல்சி விவகாரத்தில் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தின் அறிக்கைக்கு எதிராக அன்புமணி துரைமுருகனிடம் முறையிட்டதாக தினமலரில் வந்த செய்தி குறித்து எழுப்பிய கேள்விக்கு தினமலர் செய்தித்தாள் நிருபர் என் கூடவே இருப்பார். நான் எங்கு சென்றாலும் அழைத்து செல்கிறேன் என அன்புமணி கிண்டலாக பதில் கூறினார்.
என்.எல்.சி.மூன்றாவது சுரங்கம் அமைக்கப்படுவது குறித்து கேட்டதற்கு, சமீபத்தில் கூட நெய்வேலியில் 26 கிராமங்கள் அடங்கிய 12500 ஏக்கர் நிலங்கள் காவிரி டெல்டா பகுதியில் வருகிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக வருகிறது.
என்.எல்.சி.நிர்வாகம் மூன்றாவது சுரங்கம் அமைக்க அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
முதலமைச்சர் சட்டமன்றத்திற்குள் ஒரு உத்தரவாதம் அளித்தார். ஆனால் அனுமதி கொடுக்க மாட்டோம் என ஒரு அறிவிப்பும் தற்போதுவரை வரவில்லை.
மத்திய அமைச்சரிடம் நான் கேட்ட போது, இதுவரை தமிழ்நாடு அரசு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என அன்புமணி கூறினார்.
என்.எல்.சி.விவகாரத்தில் பாமக உணர்வு பூர்வமாக போராடி வருகிறது. 65000 ஏக்கர் விளைநிலங்களை தமிழக அரசு குத்தகைக்கு விட்டுள்ளது.
இதில் 40000 ஏக்கர் நிலங்களை அழித்து விட்டனர். சோறு போடும் புண்ணிய மண் இது, 38 மாவட்டத்தில் 4வது இடத்தில் வருவது கடலூர் மாவட்டம் நெல் உற்பத்தியில், அங்கு யாராவது இந்த திட்டத்தினை தொடர்வார்களா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஆதரவளிப்பவர்கள் தமிழ்நாட்டின் எதிரிகள் குறிப்பிட்டார். வருகிற தலைமுறைக்கு உணவளிக்கனும்
45 ஆண்டுகளில் விவசாய நிலம் 12% குறைந்துள்ளது, கடந்த 50 ஆண்டுகளில் விவசாய நிலம் குறைந்து போயுள்ளதால்ல் எங்கு நமக்கு சோறு கிடைக்க போகுது.
கால நிலை மாற்றம், பருவ நிலை மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. நீர் ஆதாரத்தை காக்க வேண்டும். மண்ணை அழிக்க எப்படி மனது வருகிறது.
முதல்வர் சட்டமன்றத்தில் மூன்றாவது நிலக்கரி சுரங்கம் கொண்டு வரகூடாது என சொன்னார்.விவசாயிகளை அச்சுறுத்தி நிலங்களை பிடுங்குகிறீர்கள், என்.எல்.சி.இல்லையென்றால் தமிழகம் இருண்டு விடும் என்பது மிகப்பெரிய காமெடி என விமர்சித்தார்.
என்.எல்.சி. தமிழகத்திற்கு 800 மெகாவாட் மின்சாரம் தருகிறது. அதிகளவில் ஆந்திராவிற்கும், கர்நாடகாவிற்கும் தான் கொடுக்கிறது. எங்கள் மண்ணை அழித்து அவர்களுக்கு ஏன் மின்சாரம் தர வேண்டும் .
மண்ணிற்காக போராடிய எங்கள் கட்சிக்காரர்கள் சிறையில் இருக்கிறர்கள். கஞ்சா விற்பவர்கள் எல்லாம் வெளியே இருக்கிறார்கள்.
வெளியில் இருந்து ஆட்களை அழைத்து வந்து கலவரம் செய்ததாக்க வேளாண் அமைச்சரின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அன்புமணி, ஜப்பானில் இருந்து ஆட்களை அழைத்து வந்தோமா, கட்சிக்காரர்கள் வந்தார்கள் மண்ணுக்காக்க வந்தார்கள். வேளாண் துறை அமைச்சருக்காக போராட வந்தார்கள். அவருக்கு வேளாண் துறையை பற்றி தெரியுமானு தெரியல.
இதிலென்ன வன்முறை. ஸ்டெர்லைட் வன்முறை இல்லையா? ஒரு போராட்டம் நடக்கிறது அங்கு.
மூன்றாவது சுரங்கம் வராது என சொல்ல அமைச்சருக்கு என்ன தடுக்கிறது.
சமீபத்தில் பூவுலக நண்பர்கள் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்கள். அதில் என்.எல்.சி.சுற்றி வசிக்கும் 90% வீடுகளில் இருப்பவருக்கு ஏதோ ஒரு நோய் உள்ளது.
மெர்குரி 250% அதிகமாகியிருக்கு
இந்நேரம் தமிழக அரசு ஆய்வு செய்திருக்க வேண்டும், பொதுமக்கள் மீது அக்கறை கிடையாது, வேளாண் அமைச்சரின் குடும்பம் அங்குள்ளது அவர்கள் மீது அக்கறை வைத்து செய்திருக்கலாமே
அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது. அவர் சொந்தகாரர் ஒப்பந்ததாரராக இருப்பதால் அமைதியாக இருக்கிறார்களா.
20 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் தேவைபட்டது அப்போது மின் பற்றாக்குறை இருந்தது. தற்போது மின்மிகை மாநிலமாக மாறிவிட்டதாக அமைச்சர் சொல்கிறார். அதனால் என்.எல்.சி.தேவையில்லை
மணிப்பூர் விவகாரம் மோடி பேச்சு திருப்திகரமாக இருந்ததா என கேட்டதற்கு. எல்லை கடந்த பிரச்சனையாக பார்க்கிறேன். இரு சமூக மத பிரச்சினை, மத்திய அரசு இன்னும் கவனம் செலுத்தி சரிபடுத்த வேண்டும்.
பிரதமர் அங்கு சென்று ஒரு உத்திரவாதம் கொடுக்க வேண்டும்
சட்டமன்றத்தில் நடந்த விவாகரத்தை நாடாளுமன்றத்தில் பேசியது மரபாக தெரியவில்லை என அன்புமணி கூறினார்.