
மாமல்லபுரத்தில் சர்வதேச அலைசறுக்கு போட்டி இன்று (ஆக.14) தொடங்கி வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னையை அடுத்த கோவளத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதில் இந்தியா தரப்பில் 15 வீரர்கள் உட்பட 12 நாடுகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சர்வதேச அலைச்சறுக்கு வீரர்கள் பங்கேற்கின்றனர்.