
‘வேதாளம்’ படத்தின் ரீமேக்கான ‘போலா சங்கர்’ பட நிகழ்ச்சியில் பேசிய சிரஞ்சீவி, “ஏன் ரீமேக் படங்களிலே தொடர்ந்து நடித்து வருகிறீர்கள் என்று பலர் கேட்கிறார்கள். என்னை பொறுத்தவரை கதை நன்றாக இருக்கும்போது அதை ரீமேக் செய்து ரசிகர்களுக்கு கொடுப்பதில் என்ன தவறு? ஒடிடி வந்த பின் அனைத்து மொழி ரசிகர்களும் அனைத்து மொழிகளிலும் படங்களை பார்க்க முடிகிறது” என்றார்.