சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் டோக்சுரி புயலால் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 10 நிலவரப்படி மழை வெள்ளத்தால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாயமான 16 பேரைத் தேடும் பணி நடந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.