முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‌ தலைமைச்‌ செயலகத்தில்‌, பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்துறை சார்பில்‌ 12 கோடியே 24 இலட்சம்‌ ரூபாய்‌ செலவில்‌ கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர்‌ நலக்‌ கல்லூரி மாணவ, மாணவியருக்கான 5 விடுதிக்‌ கட்டடங்களை திறந்து வைத்தார்‌. இந்த நிகழ்ச்சியில்‌, பிற்படுத்தப்பட்டோர்‌ நலத்துறை அமைச்சர்‌ ஆர்‌.எஸ்‌.ராஜகண்ணப்பன்‌, தலைமைச்‌ செயலாளர்‌சிவ்தாஸ்‌ மீனா, பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்துறை செயலாளர்‌ ரீட்டா ஹரீஷ்‌ தக்கர்‌, பிற்படுத்தப்பட்டோர்‌ நல ஆணையர்‌ அணில்‌ மேஷ்ராம்‌, மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ நல ஆணையர்‌ வா.சம்பத்‌, பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்துறை சிறப்புச்‌ செயலாளர்‌ ஹனீஷ்‌ சாப்ரா ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.