
தாம்பரம் மாநகராட்சி 3 வது மண்டலதிற்குட்பட்ட 3 இடங்களில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தொகுதி மேம்பாட்டு நிதி 21 லட்சத்தில் அமைக்கப்பட்ட மூன்று குடிநீர் சுத்திகரிப்பு மையங்களை ஸ்ரீ பெரும்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தனர்.
அதனயடுத்து புதியதாக கட்டப்பட்ட 3 வது மண்டல அலுவலக கூடுதல் கட்டிடத்தையும் திறந்துவைத்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப படிவங்கள் பெரும் மையத்தை டி.ஆர்.பாலு பார்வையிட்டு தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் அழகுமீனாவிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாள்ர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு:- கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்க தாம்பரம் மாநகராட்சியில் சிறப்பாக விண்ணப்பங்களை பெற்றும் முகாம் நடைபெறுகிறது என்றார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்ற வர சபாநாயகர் விரைவாக நடவடிக்கை எடுப்பார் உச்ச நீதி மன்றம் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நடவடிக்கை மேற்கொள்வார். அகமதாபாத் உயர்நிதி மன்றம் உத்திரவுக்கு எவ்வளவு விரைந்து பதவி நீக்கம் செய்தாரோ அதுபோல் ராகுல்காந்தி விரைந்து நாடாளுமன்றம் வர நடவடிக்கை எடுபார் என்றார்.
இந்தியா கூட்டணிக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 31ம் தேதி மும்பை செல்வார் மேலும் தேசிய அளவில் கட்சிகள் இணையும் என்றார்.
பயணிகள் தேவைக்கு தாம்பரம் ரயில் முனையத்தில் எல்லா விரைவு ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் தேஜாஸ் ரெயிலும், வந்தே பாரத் ரெயில் எதுவாக இருந்தாலும் ஒரு நிமிடம் நிற்பதால் மக்களுக்கு நன்மை தான் என்றார்.
இந்த நிகழ்சியில் மண்டல குழு தலைவர்கள் ஜெயபிரதீப் சந்திரன், காமராஜ், இந்திரன், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.