நெய்வேலியில் 20 ஆண்டுகளாக நிலத்தை சுவாதீனம் எடுக்காத நீங்கள், பயிரை அறுவடை செய்யும் வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா? பயிரிடப்பட்ட நிலத்தில் புல்டோசர்கைளை விட்டு கால்வாய் தோண்டியதை பார்க்கும் போது எனக்கு அழுகை வந்துவிட்டது.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் எனக் கூறிய வள்ளலார் பிறந்த ஊருக்கு அருகிலேயே பயிர்கள் அழிக்கப்படுவதை காண முடியவில்லை. நிலத்தை எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது.