
கடலூர் மாவட்டம் வீரசோழன் கிராமத்தைச் சேர்ந்த தீபா என்பவர் 3 மாதங்களுக்கு முன்பு திருடுபோன தனது எருமை மாட்டை, பழனிவேல் பிடித்து வைத்திருப்பதாக போலீசில் புகார் அளித்தார்.
ஆனால், பழனிவேலோ, தனது உறவினரிடம் வாங்கி பல மாதங்களாக வளர்த்து வருவதாக கூறினார்.
இதனால் போலீசார், மாட்டுக்கு டெஸ்ட் வைத்து பிரச்னையை தீர்த்து வைத்தனர்.
ஒரே எருமை மாட்டிற்கு 2 பேர் சொந்தம் கொண்டாடியதால், குழப்பமடைந்த போலீசார்; மாடு யாரிடம் அதிக பாசம் காட்டுகிறது என டெஸ்ட் வைத்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
மாடு இருவரிடமும் பாரபட்சமின்றி பாசம் காட்டியதால் முதலில் குழப்பமடைந்தனர்.
அதன்பின் பழனிவேல் என்பவர் சைகை செய்த உடன், மாடு அவருடன் சென்றது; இதனால் புகார்தாரர் தீபா விரக்தி அடைந்தார்.