
தேவையானவை:
கோதுமை ரவை–¼கப்,
வெங்காயம்,
வெள்ளரிக்காய்,
பச்சை, மஞ்சள், சிகப்பு குடைமிளகாய் தலா– 1,
புரோக்கோலி–பாதியளவு,
கெட்டியான தக்காளி– 2,
ஆலிவ் ஆயில்– 2 டேபிள்ஸ்பூன்,
மிளகுதூள் – 1 டீஸ்பூன்,
வறுத்த பாதாம்பருப்பு– 7(நீளமாக மெல்லியதாக வெட்டியது),
நறுக்கிய கொத்தமல்லி தழை– 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு–தேவைக்கேற்ப,
பூண்டுபல்– 2.
செய்முறை:
கோதுமை ரவையைக் கழுவி தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரில் போட்டுக் குழையாமல் உதிர் உதிராக வேக வைத்து தண்ணீரை வடித்து ஆற வைக்கவும். 3 கலர் குடை மிளகாய்களை விதை நீக்கி நான்குத் துண்டுகளாகப் பெரிதாக நறுக்கிக் கொள்ளவும். புரோக்கோலியை பெரியப் பூக்களாக வெட்டிக் கொள்ளவும். ஒரு கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி அடுப்பில் வைத்து நறுக்கிய கலர் குடை மிளகாய், பூண்டு, புரோக்கோலி ஆகியவற்றை லேசாக நிறம் மாறாமல் வதக்கவும். பிறகு வதக்கிய குடமிளகாய், பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புரோக்கோலியை நறுக்கத் தேவையில்லை. வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கவும். வேகவைத்த கோதுமை ரவை, காய்கறி, உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைசாறு, கொத்தமல்லிதழை எல்லாவற்றையும் ஒருபவுலில் சேர்த்து கலந்து அதன் மேல் நறுக்கிய பாதாம் பருப்பை தூவி பரிமாறவும். குறிப்பு: இந்த சாலட்டில் கோதுமை ரவைக்குப் பதிலாக வேகவைத்த சிறுதானியங்களைச் சேர்க்கலாம்.