கடந்த 2001 ம் ஆண்டு அதிகாரத்தை பயன்படுத்தி அரசு நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து , மாமியார் பெயரில் பதிவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் மீது விசாரணை நடந்து வந்த நிலையில், இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.